பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தால் பெற்றோருக்கு சிறை - கிரேக்க அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
கொவிட் 19 தொற்றுநோயைத் தொடர்ந்து அனைத்துப் பாடசாலைகளும் சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க மீண்டும் திறக்கப்பட்டவுடன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கிரேக்க அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைகள் தொடங்கப்பட்டாலும் மாணவர்களின் வரவு எண்ணிக்கை மிகவும் குறைவு என கிரேக்க அரசு தெரிவித்துள்ளது.
கிரீஸில் கொவிட் 19 டோஸை பெறத் தயங்கும் பலர் உள்ளனர், மேலும் அவர்கள் முககவசம் அணியவில்லை அல்லது சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றவில்லை என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
16 வயதுக்குட்பட்ட அனைத்து பிள்ளைகளும் நோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை என்றால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்றும்,தவறின் இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் (59 யூரோக்கள் (US $ 67) பெற்றோருக்கு விதிக்கப்படும் என்றும் கிரேக்க அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
