ஆளில்லா போர் விமானங்களின் உலகளாவிய சந்தையில் தீவிரம் காட்டும் ஆசிய நாடு!
ஆளில்லா போர் விமானங்களை தயாரித்து உலகளாவிய சந்தையில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பல நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.
இந்தநிலையில், ஆளில்லா போர் விமானங்களுக்கான சந்தையில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்து வருகிறது.
சவூதி அரேபியா, ஈராக், மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் அதிகளவான சீனா ஆளில்லா போர் விமானங்கள் போர்க்களங்களில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சீன ஆளில்லா போர் விமானங்கள்
உலகளாவிய ஆயுத விநியோகத்தை கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி அமைப்பானது தனது சமீபத்திய அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையின்படி, 282 போர் விமானங்களை 17 நாடுகளுக்கு சீனா வழங்கியுள்ளது.
மொராக்கோ, எகிப்து, அல்ஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் சீனாவிடம் இருந்து ஆளில்லா போர் விமானங்களை மாத்திரமல்ல, வான்வழி ஏவுகணைகளை தாக்கக்கூடிய விமானங்களையும் கொள்வனவு செய்வதாக சொல்லப்படுகின்றது.
அமெரிக்காவின் ஆதிக்கம்
உலகில் மிக நவீனமான யு.ஏ.வி.களைப் பயன்படுத்தும் அமெரிக்கா, கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.