சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சீன - இந்திய இருதரப்பு அரசியல் சந்திப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் இடையேயான சந்திப்பு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (23.06.2026) புதுடெல்லியில் நடைபெற்றது.
16வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாங் யி இந்தியாவில் இருந்தபோது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பாரம்பரிய நட்புறவு
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியாவும் சீனாவும் தங்களது பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் உயர் மட்ட உறவுகளைப் பேண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம், உலக தெற்கு நாடுகளின் பொது நலன்களைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கவுள்ள சீனாவிற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் முன்னேற்றத்திற்காக சீனாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர நம்பிக்கை
இதற்கிடையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா ஆவலுடன் இருப்பதாக வாங் யி கூறியுள்ளார்.

சந்தேகங்களைப் போக்கவும், பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்து பேணவும், நுட்பமான பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கவும், இரு தரப்பினருக்கும் முக்கியமான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் தாம் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும், இந்தியா - சீனா உறவுகளின் நேர்மறையான போக்கைப் பேணிக்காத்துக்கொண்டே, இரு தரப்பினரும் இணைந்து நவீனமயமாக்கல் செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வாங் யி குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 7 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்