காணாமல் போன யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
ஹாலி எல பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடளிக்கக்கப்பட்டுள்ள 19 வயது இளம்பெண் ஒருவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தனது மகள் காணாமல் போயுள்ளார் என்று அந்தப் பெண்ணின் தாயாரால் கடந்த 2026 மார்ச் 6 அன்றே முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காணாமல் போனவர், ஹாலி எல ஹெல மொரெம்தொட்ட பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலாகே கவிந்திர பவானி என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
அடையாளங்கள்
அவர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர் என்றும், இடுப்புக்குக் கீழே நீண்ட கூந்தலைக் கொண்டவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை வெலிமட நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அதன்படி, இவர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், அட்டம்பிட்டிய காவல் நிலையத்தை 055-2294965 என்ற எண்ணிலோ அல்லது நிலைய அதிகாரியை 071-8591528 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 8 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்