அமெரிக்காவுக்கு சீனா தடாலடி பதில்
தாய்வான் தங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத பகுதி என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 1949இல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தாய்வான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தாய்வான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜீ ஜின் பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.
அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தாய்வானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனா கூறி வருகிறது. இந்தச் சூழலில் அண்மைக் காலமாக தாய்வான் மற்றும் சீனா இடையே இராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கும் என தாய்வான் அச்சத்தில் உள்ளது.
இதற்கிடையில், சீனா தாய்வானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்துக்கு “தாய்வான் தங்கள் நாட்டின் பிரிக்கமுடியாத பகுதி என்று” சீனா பதிலடி கொடுத்துள்ளது