சீனா-தாய்வான் எல்லையில் நிலவிய போர்ப் பதற்றம் - உலகநாடுகளுக்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு!

United States of America China Taiwan
By Kalaimathy Aug 12, 2022 09:30 AM GMT
Report

தாய்வான் எல்லையில் சீன இராணுவம் மேற்கொண்டிருந்த தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

உலக வல்லரசான அமெரிக்காவின் சபாநாயகர் அண்மையில் தாய்வானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

அவர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியானதையடுத்து சீனா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் சீனாவின் எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாது அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வனுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

நான்சி பெலோசியின் விஜயத்தையடுத்து எல்லையில் பதற்றம்

சீனா-தாய்வான் எல்லையில் நிலவிய போர்ப் பதற்றம் -  உலகநாடுகளுக்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு! | China Taiwan Border War America Missile Army

இவ்வாறான நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தாய்வான் எல்லையில் திடீரென்று தீவிர போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டது.

அதிநவீன ஏவுகணைகளை ஏவி கடும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. குறித்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னரும் ஒத்திகையை நீட்டித்து வந்தது.

பதிலுக்கு தாய்வானும் பீரங்கி பயிற்சியை முன்னெடுத்தது. மட்டுமின்றி, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாவும் தாய்வான் ராணுவம் பதிலடி அளித்திருந்தது.

இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணுவ பயிற்சிகளை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு நிம்மதியளித்த சீனாவின் அறிவிப்பு

சீனா-தாய்வான் எல்லையில் நிலவிய போர்ப் பதற்றம் -  உலகநாடுகளுக்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு! | China Taiwan Border War America Missile Army

இது தொடர்பில் சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாய்வான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பு மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.

மட்டுமின்றி, கடந்த சனிக்கிழமையே தாய்வான் வணிகக் கப்பல்களை அனுமதிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்வான் எல்லையில் போர் ஒத்திகையை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளதுடன், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024