ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை
ஈரான் மீதான 60 நாட்களுக்கான பொருளாதாரத் தடைத் தளர்வு என்பது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.
அத்தோடு புதிய ஒப்பந்தத்தின் கீழ் டெஹ்ரான் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் என வாஷிங்டன் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாகக் குவைத் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய தடை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஈரான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் தற்போதைய தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல தெரிவுகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வசம் உள்ளன.

இருப்பினும், ஜனாதிபதி உடனடியாக அதைச் செய்வார் என்று நான் கூறவில்லை.
அத்தகையதொரு கடுமையான தெரிவும் அவரிடம் உள்ளது என்பதையே குறிப்பிடுகிறேன்.
பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ஈரான் மிகவும் தெளிவான மற்றும் நேரடியான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதுடன் அந்த வாக்குறுதிகளை அவர்கள் கண்டிப்பாகக் காப்பாற்ற வேண்டும் என்பதில் ட்ரம்ப் மிகவும் உறுதியாக உள்ளார்.

ஈரான் தனது இணக்கப்பாட்டைத் தொடர்ந்தால் மட்டுமே அமெரிக்காவும் இந்த உடன்படிக்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ தெரிவுகளைப் பயன்படுத்துவார்.
அவர்கள் தங்களது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்” என அவர் தெரிவித்துள்ளார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 17 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்