தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை

Vavuniya Crime Court of Appeal of Sri Lanka High Court of Sri Lanka
By Thulsi Aug 11, 2026 07:56 AM GMT
Report

வவுனியாவில் நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா - தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண் பிள்ளையை தவறான நடத்தைக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய நபருக்கு, எதிராக வவுனியா காவல்துறையினரால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து மோதி தாயும் மகனும் பலி - குழந்தை பலத்த காயம்

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து மோதி தாயும் மகனும் பலி - குழந்தை பலத்த காயம்

வழக்கு விசாரணை

அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த நபருக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை | Man Gets 40 Years In Jail For Abuse Of Kid  

இதனையடுத்து குறித்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில், அவருக்கு எதிராக அரச சட்டத்தரணியினால் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், வழக்கு தொடுனர் தரப்புகுற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா, குறித்த சந்தேக நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!

மீண்டும் வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்!

கடுமையான உடல் மற்றும் உள பாதிப்பு

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளன.

தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை | Man Gets 40 Years In Jail For Abuse Of Kid

இந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டதரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், வழக்கு நடவடிக்கையின் போது சந்தேக நபர், தலைமறைவாகியிருந்தமை,  சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், பெருகி வரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பனவே குறித்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தனது, தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: புதைந்துள்ள மக்கள் - அவசர நிலை பிரகடனம்

வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: புதைந்துள்ள மக்கள் - அவசர நிலை பிரகடனம்




ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024