மார்கோ ரூபியோவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் கடும் பதிலடி: வெடித்த சர்ச்சை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்களுக்கும் அமைதியின்மைக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களே காரணம் என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் (Marco Rubio) குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அத்துடன் இப்பிராந்தியத்தின் அமைதிக்கு அமெரிக்காவின் கொள்கைகளே முதன்மையான தடையாக விளங்குவதாகவும் ஈரான் வாதிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த இராஜதந்திரக் குற்றச்சாட்டுகளால் யாரையும் ஏமாற்றிவிட முடியாது என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவு
தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கைத் தளமாகக் கொண்ட ஆயுதக் குழுக்கள், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய அமைப்புகளை ரூபியோ கண்டித்துப் பேசும் காணொளிக் காட்சியொன்றையும் அவர் அதனுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து இஸ்மாயில் பாகேய் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது “அமெரிக்காவின் இராணுவவாதமும் பிற நாட்டு விவகாரங்களில் தலையிடும் போக்கும் நீடிக்கும் வரை இப்பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முடியாது.
மேலும் அமெரிக்காவின் ஆதரவுடன் முழுமையான விலக்குரிமையைப் பெற்றுக்கொண்டு, பிராந்தியத்தில் முடிவில்லாப் போர்களையும் இனப்படுகொலைகளையும் பயங்கரவாத வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ள அவர்களின் ஆக்கிரமிப்புப் பிரதிநிதியான (இஸ்ரேல்) இருக்கும் வரை அமைதி என்பது சாத்தியமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 18 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்