“சிறிலங்காவில் சத்தமில்லாத யுத்தத்தை முன்னெடுக்கும் சீனா”

India Jaffna People Chine SriLanka
By Chanakyan Dec 19, 2021 11:06 AM GMT
Report

சீனா இலங்கை மீது ஒரு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் ஒரு மிகமோசாமான பொருளாதார நெருக்கடியினை சந்திக்கக்கூடிய நிலையில் இன்று சீனாவின் பக்கம் சாய்ந்து நிக்கின்றது இந்த நிலமையினை சீனாவே உருவாக்கி நிற்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மை நாட்களில் வடமாகாணத்தில் சீனத்தூதுவரின் வருகை செயல்பாடுகள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின் கருத்துக்களையம் மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய தேவையுள்ளது.

சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முன்னர் நாங்கள் கருத்துக்களை சொல்லிவந்துள்ளோம். சீனா இலங்கை மீது ஒரு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது.

அதன் விளைவுகள் மிக பாரதூரமாக தமிழர் தாயகத்தில் அமையும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம். சீனாவின் அடுத்த கட்ட நகர்வு இலங்கையில் தமிழர் தாயகத்தில் வடமாகாணத்தினை கைப்பற்றும் நோக்குடன் இலங்கை அரசின் அமைச்சு பொறுப்புக்களில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் கால்பதிக்க நினைக்கின்றது.

சீனா உலகத்தில் எந்த நாடுகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சென்றுள்ளதோ அந்த நாடு அபிவிருத்தி அடைந்ததாக வரலாற்றில் நான் கண்டதில்லை மாறாக அந்த நாடுகள் சீனாவிடம் அடிமைப்படுத்தப்பட்டு பொருளாதாரரீதியாக வளர்ச்சியடையமுடியாமல் பின்னடைவினை நோக்கி சென்று நாடு முன்னேற்றம் கண்டதாக நாங்கள் அறிந்ததில்லை.

இலங்கையும் ஒரு மிகமோசாமான பொருளாதார நெருக்கடியினை சந்திக்கக்கூடிய நிலையில் இன்று சீனாவின் பக்கம் சாய்ந்து நிக்கின்றது இந்த நிலமையினை சீனாவே உருவாக்கி நிக்கின்றது.

இது தொடர்பில் தமிழர்கள் தரப்பினை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருக்கின்றார்கள் சீனாவிற்கு எதிராக பலமான எதிர்பினை கொடுக்க தாமதித்து வருகின்றார்கள்.

அண்மையில் சீனத்தூதுவர், யாழ்,மன்னார் மாவட்டங்களுக்கு சென்று கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளார். அந்த இடங்களில் வளங்களை ஒளிப்பதிவுசெய்து எமது வளங்களின் ஆக்கிரமிப்பினை எவ்வாறு செய்யலாம் என்ற திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

பருத்தித்துறை என்பது மிக முக்கியமான முனை அது ஒரு துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் வேதாரணியத்திற்கும் மிக அண்மையாக இருக்கின்றது எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒரு அச்சுறுத்தலை சீனா கொடுப்பதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.

இந்த செயற்பாடு எதிர்காலத்தில் மிகமோசமான பாரதூரமான விளைவுகளை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தும். மன்னாருக்கு சென்று இராமர் பாலம் வரை சீனத்தூதர் சென்றுள்ளார்.

வடமாகாண அபிவிருத்திக்காக இராமர் பாலத்தினை சென்று பார்க்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை இதுவும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடகத்தான் இருக்கின்றது. எனவே இந்தியாவின் நலன்சார்ந்த விடயத்தில் ஈழத்தமிழர்கள் அக்கறையுடன் இருக்கவேண்டிய தேவை இப்போது இருக்கின்றது. உலகத்தில் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும்.

ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஒரு இனமாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் சம உரிமையுடன் இலங்கைத்தீவில் வாழ அதற்கான திட்ட வரைபுகளை உருவாக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் புதிய நடைமுறைச்சட்டத்தினை கூட கொண்டுவந்தது.

இந்தியா தான் இந்தியாவின் அனுசரணையும் ஆதரவும் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு தேவையாக உள்ளது. ஈழத்தமிழர்களை இந்தியாவினுடைய உறவுமுறையில் இருந்து பிரித்தெடுப்பதற்காக அந்த உறவினை சிதைப்பதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா மக்களுக்குள் புகுந்துள்ளது.

இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் அவர்கள் சீனாவினை இங்கு கொண்டுவந்துவிட்டுள்ளார். சீனாவுடன் முழுமையாக இணைந்து வேலைசெய்கின்றார்.

கடற்கரை சமூகம் ஊடாக சீனாவின் கைகளுக்குள் சிக்கக்கூடிய ஆபத்தான நிலமையும் இங்கு இருக்கின்றது. நாங்கள் எங்களிடம் இருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு அதனை பலமாக பல்மடங்காக வளர்த்தெடுப்பதற்கான முயற்சியினை சுயமாக சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025