இலங்கைக்கு அருகே தனது நீர்முழ்கிக் கப்பலை நகர்த்தும் இந்தியா
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததையடுத்து இலங்கைக்கு அண்மையாகவுள்ள தூத்துக்குடி துறைமுக பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் நடமாடுகின்றது.
அதிநவீன நீர்மூழ்கி கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள ஐ.என். எஸ். கட்டபொம்மன் கடற்படை கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டி சீனா தனது பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள் குத்தகைக்கு எடுப்பதாகவும் இந்தியா நம்புகிறது. அத்துடன் இந்தியாவின் நட்பு நாடான இலங்கை தற்போது சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என நம்புகிறது.
இந்த நிலையிலேயே இந்தியா தூத்துக்குடி துறைமுக பகுதியில் தனது நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் நீர்மூழ்கிக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.