சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி கைது
கொள்ளுப்பிட்டி பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரொடுண்டா கார்டன் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (01.05.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீன நாட்டைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கொள்ளுப்பிட்டி காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடந்த சோதனையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 100 சிகரெட்டுகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையின் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |