அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம்
அமெரிக்காவின் கடும் தடையையும் மீறி, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட சீன எண்ணெய் கப்பல் ஒன்று ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரிச் ஸ்டாரி என்ற அந்த சீனக் கப்பல், அமெரிக்கா விதித்த முற்றுகைக்குப் பிறகு இந்த நீரிணையைக் கடந்து வளைகுடா பகுதியிலிருந்து வெளியேறிய முதல் கப்பல் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா தடை
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததற்காக இந்தக் கப்பல் மற்றும் அதன் உரிமையாளரான 'ஷங்காய் சுவான்ருன் ஷிப்பிங் நிறுவனம் மீது ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்திருந்தது.

Image Credit: Maritime Optima
இறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்ட இந்தக் கப்பல், தற்போது தடையை மீறி பயணத்தைத் தொடர்வதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் உத்தரவு
இதேபோல், அமெரிக்காவின் தடையில் உள்ள மற்றொரு கப்பலான முரளிகிஷன் இன்று ஹார்முஸ் நீரிணைக்குள் நுழைந்துள்ளதாகவும், அது ஏப்ரல் 16 அன்று ஈராக்கில் கச்சா எண்ணெயை ஏற்ற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Image Credit: Vanity Fair
முன்னர் எம்.கே.ஏ என்று அழைக்கப்பட்ட இந்தக் கப்பல், கடந்த காலங்களில் ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களை வழிமறிக்க அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தச் சீனக் கப்பல்களின் நகர்வு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |