ஈரான் போரில் அமெரிக்காவின் புதிய நகர்வு : குர்திஷ் கிளர்ச்சிக்குழுவை களமிறக்குறது CIA
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஐந்தாவது நாளில் நுழையும் நிலையில், குர்திஷ் படைகளை ஆயுதபாணியாக்கி ஈரானில் ஒரு எழுச்சியைத் தூண்டும் முயற்சியில் அமெரிக்கா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குர்திஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சிஎன்என் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் குர்திஷ் குழுக்களுடன் ஆயுதபாணியாக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடி வருகிறது.
ஈரானை எதிர்த்து தாக்குதல்களை நடத்திவரும் குர்திஷ் கிளர்ச்சிக்குழு
புதன்கிழமை நிலவரப்படி, ஏதேனும் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தெஹ்ரானை எதிர்த்து ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்திலும், பிற மேற்கு மாகாணங்களிலும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். அவர்கள் ஈராக்-ஈரான் எல்லையில் செயல்படுகிறார்கள்.ஈரான் மற்றும் ஈராக்கின் குர்திஷ் சிறுபான்மையினருடன் நெருங்கிய உறவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஈராக்கில் குர்திஷ் கிளர்ச்சிக்குழுவுடன் பணியாற்றிய சிஐஏ
அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ, 2003 இல் அமெரிக்கா படையெடுத்த அண்டை ஈராக்கில் உள்ள குர்திஷ் குழுக்களுடன் இணைந்து பணியாற்றிய வரலாற்றைக் கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு எதிராக சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு வோஷிங்டன் நிதியளித்து, ஆயுதம் ஏந்தி பயிற்சி அளித்தது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கும் அரசாங்கங்களை சீர்குலைக்க கடந்த பல தசாப்தங்களாக பல நாடுகளில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு சிஐஏ நிதியளித்துள்ளது.
நடந்து வரும் போருக்கு மத்தியில், ஈரான் அண்டை வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கும் நிலையில், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) மேற்கில் உள்ள குர்திஷ் நிலைகளையும் குறிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |