திலினி பிரியமாலியுடனான தொடர்பு ஞானசார தேரரிடம் தீவிர விசாரணை
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்ட திலினி பிரியமாலி உடனான தொடர்புகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளதுடன் வாக்குமூலமும் பதிவு செய்துள்ளது.
ஞானசார தேரருடனான தொடர்பு பற்றிய தகவல்கள் திலினி பிரியமாலியின்,கைத்தொலைபேசியில் உள்ள ஒலிநாடாக்களில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் திலினி பங்கேற்றிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒலி நாடாக்களில் இருந்து கிடைத்த தகவல்கள்
ஞானசார தேரருக்கு சொந்தமான கார் ஒன்றுடன் தொடர்புடைய 375 இலட்சம் ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல் குறித்தும் குறித்த ஒலி ஒலிநாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஞானசார தேரருக்கு சொந்தமான காரை காப்பாற்றுவதற்காக ஜானகி சிறிவர்தனவிடம் திலினி பணத்தை கொடுத்ததாக அந்த ஓடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.