யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம்
கொழும்பு–யாழ்ப்பாணம் விரைவு தொடருந்தில் ஒரு போத்தல் குடிநீர் 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இதன்மூலம் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் குடிநீர் விற்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடருந்தின் உணவகப் பகுதியில் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையக சோதனையின் போது இது கண்டறியப்பட்டுள்ளது.
சோதனை
அனுராதபுர தொடருந்து நிலையத்தில், அதிகாரிகளால் இந்தச் சோதனை நேற்று நடத்தப்பட்டது.

இதன்போது, 120 ருபாய் எனக் குறிக்கப்பட்ட ஒரு போத்தல் குடிநீர் 150 ரூபாய்க்கு விற்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து நுகர்வோரிடம் அதிக விலை வசூலித்த சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிகள் இன்மையால் நடவடிக்கை
இதேவேளை, காங்கேசன்துறை - கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடருந்து பெட்டிகள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |