கபில சந்திரசேன மரணம்: போதைப்பொருள் அறிக்கை கோரி நீதவான் அவசர நினைவூட்டல்
சிறிலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிர்வாக அதிகாரி, கபில சந்திரசேனவின் மரண நிகழ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் குறித்த அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கையை அவசரமாகக் கோருவதற்கான நடவடிக்கைகளை கோட்டை நீதவான் பசன் அமரசேன எடுத்துள்ளார்.
இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அறிக்கையை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரி நீதவான் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு ஒரு விசேட நினைவூட்டலை அனுப்பியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் உள்ள ஒரு அறையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் குறித்து பகுப்பாய்வாளர் திணைக்களத்திலிருந்து எந்த அறிக்கையும் இதுவரை பெறப்படவில்லை என்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனை அறிக்கை
அதனைக் கருத்தில் கொண்ட பின்னர் நீதவான் பசன் அமரசேன மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், இறந்தவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு கோரி கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிந்துகொள்வதற்காக இவ்மாதம் 22 ஆம் நாளில் சம்பந்தப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |