கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் இலங்கையர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாயக்கும் அதிக மதிப்புள்ள தங்கத்துடன் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வந்து, அனுமதி இல்லாமலும், சுங்கத்துறையிடம் அறிவிக்காமலும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற நிலையில் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது தொழிலதிபர் என காவர்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
இவர் நேற்று காலை 6.30 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மேற்கொள்ளபட்ட சோதனையில் அவரது பயணப் பையில் 271 கிராம் (480 மில்லிகிராம்) எடையுள்ள 12 தங்க நெக்லஸ்கள், 10 கைக்காப்புகள் மற்றும் 2 தங்க பிஸ்கட்டுகளை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்யபட்ட தங்க நகைகள் 11.8 மில்லியன், 85 ஆயிரத்து 514 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று காலை, மேலதிக விசாரணைக்காக பறிமுதல் செய்யபட்ட தங்கமானது சுங்கத் தடுப்பு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நடைபெற்ற முறைசார்ந்த சுங்கப் பரிசோதனையின் போது, தங்க இருப்பு பறிமுதல் செய்யப்பட்டதுடன் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட குறித்த நபருக்கு10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |