நீர்கொழும்பு மோதலின் தீவிரம்! நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த மோதலில் இந்திய நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் அவரை அடையாளம் காணும் பணி இன்னும் நிறைவடையவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மொத்தமாக உயிரிழந்த 28 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அமைதியின்மையில் கைதிகளின் உறவினர்கள்
இந்த கலவரத்தினை தொடர்ந்து நேற்றும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக அமைதியின்மையில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சிறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து கைதிகளின் உறவினர்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்றி உள்ளனர்.
இதன்போது, பெண் கைதிகள் குழுவினர் சிறை அறைகளிலிருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், காவல்துறையினர் தலையிட்டு, அவர்களை மீண்டும் அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஒரு பெண் கைதிகள் குழுவை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
மேலும் இந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 52 நிமிடங்கள் முன்