இஸ்ரேலில் அடுத்தடுத்து இலக்குலைக்கப்பட்ட நகரங்கள்! ஈரான் தீவிர தாக்குதல்
மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் இன்று மாலை இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அராத் (Arad) நகரை குறிவைத்து இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இது ஈரானின் பதிலடித் தாக்குதல்களின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேலிய MDA சேவை (Magen David Adom) வெளியிட்டுள்ள தகவலின்படி, தாக்குதலால் 33 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
சம்பவ இடத்தில் தீ விபத்து
இதன்படி சம்பவ இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஈரான் டிமோனா (Dimona) நகரை - இஸ்ரேலின் முக்கிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
அங்கு 39 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இத்தாக்குதல்கள், அமெரிக்க - இஸ்ரேலியப் படைகள் ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு வசதியைத் தாக்கியதற்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு கூறுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
"டிமோனா மற்றும் அராத் மீதான தாக்குதல்கள், ஈரானிய ஆட்சியாளர்கள் பொதுமக்களை மூலோபாய ரீதியாகக் குறிவைத்து, தங்கள் உறுதியற்ற தன்மையையும் மனித உயிர்கள்மீதான அலட்சியத்தையும் வெளிப்படுத்தும் பொறுப்பற்ற செயல்களாகும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |