கல்வி அமைச்சின் சொத்தை உரிமை கோரி வழக்கு தாக்கல்: கோபா குழுவில் அம்பலம்
கல்வி அமைச்சுக்கு சொந்தமான கட்டடமொன்றை இரண்டு வருடங்கள் குத்தகைக்கு பெற்றுக் கொண்ட ஒருவர் தான் தான் கட்டடத்திற்கு முதல் சொந்தக்காரர் என வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஒன்று கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
பின்வத்த உபனந்த பாடசாலையானது, பாடசாலை மேற்பார்வை குழுவின் அனுமதியின்றி 2005 ஜனவரி 25 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.
சட்டபூர்வ உரிமை
இந்த பாடசாலையை சுனாமி தாக்கியதன் பின்னர் இயங்கவில்லை.அதனால் 2008 ஆம் ஆண்டு மேல் மாகாண சபை அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய இரண்டு வருட குத்தகைக்கு மேற் குறிப்பிட்ட நபருக்கு பாடசாலை கட்டடம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வியமைச்சுக்கு சொந்தமான கட்டடத்தை மாகாண சபையின் அனுமதியில் குத்தகைக்கு வழங்குவதற்கு எவ்வித சட்டபூர்வ உரிமையும் அற்ற நிலையில் 02 வருடங்கள் குத்தகைக்கு வழங்கிய பின்னர் அதனை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
பின்னர் கட்டடத்தை மீள பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குத்தகைதாரரை வெயியேறுமாறு தீர்ப்பளிக்கப்படுகிறது.
ஆனால் அவர் மேல் நீதிமன்றத்தில் குறித்த தீர்ப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கிறார்.அங்கு வழக்கு தள்ளுப்படி செய்யப்படுகிறது.
பின்னர் அவர் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார் அங்கேயும் வழக்கு தள்ளுப்படி செய்யப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோபா குழு தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
