மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு
மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் மற்றும் போராட்டகார்கள் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்துக்கு எதிராக 24 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், இன்றையதினம் (26) மன்னார் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினர் படுகாயம்
போராட்டகாரர்கள்
இதன்போது போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை வழங்குவதற்க்கு மாவட்ட செயலகத்திற்குள் அமைதியான முறையில் நுழைந்த நிலையில் காவல்துறையினர் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்துள்ளனர்.
இதில் போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில் காவல்துறையினருக்கும் மற்றும் போராட்டகாரர்களுக்கும் இடையில் முரண்பாடு இடம்பெற்றுள்ளது.
அமைதியான முறை
இந்தநிலையில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்டகாரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்துள்ளார்.
இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் போராட்டகாரர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் மற்றும் அபிவிருத்தி குழு தலைவரியும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.
குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக அருட்தந்தை சக்த்திவேல் தலைமையில் அருட்தந்தை அருட்சகோதரிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








