பயணத்தடை நீக்கப்படவுள்ள நிலையில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
sri lanka
vavuniya
people
By Shalini
வவுனியா நகர்ப்பகுதியில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
பயணத்தடை நாளைய தினம் நீக்கப்படவுள்ள நிலையிலேயே இச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
வன்னி கட்டளை தலைமையகத்தின் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபையினர் இணைந்து தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைகள், பழைய பேருந்து நிலையப்பகுதி, புதிய பேருந்து நிலையம், வைத்தியசாலை சுற்று வட்டம் உட்பட பல பகுதிகளிலும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி