சாரா ஜெஸ்மின் தொடர்பில் இன்டர்போல் வசமுள்ள தடயங்கள்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பில் சர்வதேச காவல்துறையினர் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
தடயங்கள்
அதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் குறித்த பெண் தொடர்பான சில தடயங்களை, சர்வதேச காவல்துறையினரால் வெளியிட முடியும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சாரா ஜெஸ்மின் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியிருந்தாலும், அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சாரா காவல்துறையினால் பிடிக்கப்பட்டால், உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |