யாழ்.நகரில் உள்ள உணவகத்தில் கரப்பான் பூச்சி வடை! எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை
புதிய இணைப்பு
வடையினுள் கரப்பான் பூச்சி காணப்பட்டமையால் , வடையினை விற்பனை செய்த உணவகத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உழுந்து வடை ஒன்றினை வாங்கி சாப்பிட முற்பட்ட வேளை வடையினுள் கரப்பான் பூச்சி ஒன்று காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் குறித்த நபர் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததை அடுத்து , அங்கு உடனடியாக சென்ற சுகாதார பரிசோதகர் கடையில் மேலதிக சோதனைகளை நடத்தியதுடன், வடையினுள் கரப்பான் பூச்சி காணப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
3.00PM
யாழில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை வாங்கியுள்ளார்.
பின்னர், வீடு சென்று வடையை சாப்பிட்ட போது, வடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டு, உடனடியாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.
கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இதற்கமைய, யாழ். மாநகர சபையின் சுகாதார பரிசோதர்கள், உடனடியாக குறித்த கடைக்கு விஜயம் மேற்கொண்டு, கடையை பரிசோதித்ததோடு, கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
