இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் உயர்வு!
2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருமானம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் தேங்காய் துறை மூலமான ஏற்றுமதி வருமானம் 21.38 சதவீதத்தினால் அதிகரித்து 406.28 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
நவீன தயாரிப்புகள்
உலகளாவிய ரீதியில் இலங்கைத் தயாரிப்புகளுக்குக் காணப்படும் பலத்த தேவையும், பாரம்பரியமாக முழுத் தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக அதிக மதிப்பு கூட்டப்பட்ட நவீன தயாரிப்புகளுக்கு மாறியதுமே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேங்காய் கைத்தொழில்துறையின் அனைத்து முக்கிய பிரிவுகளும் இந்த ஆண்டு அதிகரித்த வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி 26.09 சதவீத்தினால் அதிகரிப்பு, உலர்ந்த தேங்காய் (Desiccated Coconut) ஏற்றுமதி 38.8 சதவீதத்தினால் பாரிய உயர்வு.
அதிகரித்துள்ள கேள்வி
தேங்காய் கிரீம் (Coconut Cream) 24.48 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதுடன் தேங்காய் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் அதீத தேவை காரணமாக 49.38 சதவீதத்தினால் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தேங்காய் சார்ந்த தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையில் குறிப்பாக இயற்கை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆரோக்கிய உணவுத் துறைகளில் கேள்வி அதிகரித்துள்ளது.
இந்த உலகளாவிய தேவையை நிறைவு செய்யும் நோக்கில், உள்நாட்டுத் தேங்காய் உற்பத்தியை 4.2 பில்லியன் வரை அதிகரிக்கும் இலக்குடன் உரமானியங்கள் மற்றும் மறுசெய்கைத் திட்டங்களுக்காக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |