கொழும்பு துறைமுக நகர் தொடர்பில் நடைமுறையாகும் புதிய திட்டம்!
கொழும்பு துறைமுக நகரத்தில், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு விசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ள, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு துறைமுக நகரத்தில், நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்களுக்கே இவ்வாறு விசா நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை
அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்காணும் விசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய புதிய விசா வகைகளின் விபரம் வருமாறு
- வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ‘முதலீட்டாளர் விசா’ வகை
- சேவை வழங்குநர்களுக்கான ‘சேவை வழங்குநர் விசா’ வகை
- கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ‘சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்’ விசா வகை என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
