கொழும்பு T-20 ஆட்டமும் யாழ் T-56 சூடும்...
ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் மேற்குலபாணியில் பல புதிய விதிகள் உள்ளுரில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஆனால் சிறிலங்கா காவல்துறையே தம்மால் இடைமறிக்கபடும் வாகனங்கள் தமது உத்தரவுக்கு பணியாமல் சென்றால் அவற்றின் மீது துப்பாக்கிப் பிரயோகமற்ற வகையில் மாற்று முறைகள் மீது அந்ததரப்பு கிஞ்சித்தும் கவனம் எடுப்பதில்லை.
மாறாக துப்பாக்கிச்சூடுதான் ஒரேமுடிவு என்பதாகவே பழையசிஸ்ரம் நிற்கிறது. இதனால்தான் இன்று அதிகாலை அல்லைப்பிட்டி பகுதியில் காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதான பதின்ம சிறுவன் ஒருவர் பலியாகிக்கொண்டார்.
பொதுவாக காவற்துறை மறித்து செல்லாமல் செல்லும் வாகனம் ஒன்றுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புகள் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் மறித்தும் நிற்காமல் செல்கின்றது என்பதற்காக குறித்த வாகனங்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்து அவற்றை உயிர்ப்பலிகளுடன் நிறுத்தும் முறை போர்க்கால பீதி முறை.
இந்த பழைய முறைகளை “சிஸ்ரம் சேஞ்” ஆட்சி என குறிப்பிடும் இந்த அரசாங்கம் மாற்றத்தான் வேண்டும்.
ஏனெனில் மேற்குலகம் விரும்பும் பாலியல் கல்வி மற்றும் வரிமுறைமை உட்பட்ட பல விதிகளை அவை வழங்கும் கடனுக்கும் சலுகைகளுக்கும் உள்ளுரில் பதியமிட முனைவது இந்த “சிஸ்ரம் சேஞ்” ஆட்சி.
ஆகையால் சந்தேக நபர்கள் என்றாலும் அவர்களுக்குரிய உயிராபத்தை குறைக்கும் மேற்குல முறைகளையும் இந்த அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்ற அவசியத்தை இன்றைய அல்லைப்பிட்டி சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் இந்தவிடயம் மற்றும் கொழும்பில் இடம்பெறும் இந்திய -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி-20 துடுப்பாட்டபோட்டியை மையப்படுத்திய புதிய ராஜதந்திர திருப்பங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |