வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்கள்: அதிகரிக்கப்பட்ட இழப்பீடு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Foreign Employment Bureau
By Dilakshan
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர், வேலையின் போது மரணம் அடைந்தால், அவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக பெரும் பணிகளைச் செய்துள்ளதாகவும், வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களிமிருந்து ரூ.234 மில்லியனை மீட்க முடிந்ததுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
5.1 பில்லியன் வருவாய்
அத்துடன், பணியகச் சட்டத்தைப் புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை, வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பணம் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
