அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்! சர்வதேசத்தை அதிரவைத்த முசப் ஹசன் யூசுப்பின் கருத்து
ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகரின் புதல்வரான முசப் ஹசன் யூசுப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட 12 நாள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்கூட்டியே தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.
இஸ்ரேல் வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது அமெரிக்கா தலையிட்டது அந்நாட்டின் இராணுவ உத்திகளைப் பாதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், காசா தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச சமாதானத் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்தது, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பனிப்போரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் தலையீடு இஸ்ரேலின் வெற்றியைத் தடுத்துவிட்டதாக அந்நாட்டு மக்கள் கருதுவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பெரு விரிசல் தொடர்பிலும் அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |