ட்ரம்பிற்கு ஏற்பட்ட ஆசை : தடைபோடும் சட்டம்
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப் அதற்கு அமெரிக்க சட்டம் தடையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் கூறியதாவது:
எனக்கு மிகவும் விருப்பம் தான். 2028ல் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தடை உள்ளது. மற்றொரு முறை போட்டியிடுவதை வரவேற்கிறேன்; ஆனால் சட்ட வரம்புகள் என்னை அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கிறது.
சட்டவரம்புகள் தடுக்கின்றன
எனது அரசியல் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட சட்டம் வெளிப்படையாகத் தடுக்கிறது.
எல்லோரும் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள், மேலும் அந்த விஷயத்தில் சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
இருந்தாலும், எனக்கு பதவிக்காலத்தைத் தொடர்வதில் ஆர்வம் இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக ட்ரம்ப் போட்டியிட முடியாத சூழல்
அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.

இதனால் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட முடியாத சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |