யாழில் பூரண கடையடைப்பு - கரிநாள் பேரணிக்கு வலுக்கும் ஆதரவு
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.
யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.
மக்கள் நடமாட்டம் குறைவு

இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றது, இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.










5ம் ஆண்டு நினைவஞ்சலி