தொடரும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள்! நீர்கொழும்பு சிறை மோதலில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறவினர்கள் கோரிக்கை
அத்துடன் இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறைக்கு வெளியே கூடியுள்ள கைதிகளின் உறவினர்கள், அவர்களை வெளியே அழைத்து வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும் மோதலை கருத்திற்கொண்டு மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |