சிரியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய பழங்குடியினர் கைது!
சிரியாவுக்குள் நுழைய முயன்ற 100 இற்கும் மேற்பட்ட குடியேறிகளை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளின் படி, இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் “பஷான் முன்னோடிகள்” என்று அழைக்கப்படும் ஓர் இஸ்ரேலிய குடியேற்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இந்த நிலையில், தாங்கள் ஏற்கனவே பலமுறை சிரியாவுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்தக் குழுவினர், இஸ்ரேலியப் பிரதேசம் எனத் தங்களால் உரிமை கோரப்படும் தென்மேற்கு சிரியாவில் சட்டவிரோதக் குடியேற்றங்களை நிறுவுமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு
கடந்த ஜனவரி 2025 இல் சிரியாவின் ஜனாதிபதி அகமது அல்-ஷரா பதவியேற்றது முதல், இஸ்ரேல் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான சிரியப் பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாங்கள் கைப்பற்றிய பிராந்தியங்களின் மீதான பிடியை மேலும் வலுப்படுத்துவதற்காக, இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிலுள்ள அந்தப் பகுதிகளில் முறையான குடியேற்றங்களை அமைக்க வேண்டும் என்று பஷான் முன்னோடிகள் அமைப்பு வலியுறுத்தி வருவதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |