அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு!
அரசாங்கம் திட்டமிட்ட முறையில் எதிர்கட்சியினரை இலக்கு வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனால் தான் முகப்புத்தக (Facebook) மற்றும் சமூக வலைத்தளப் பயன்பாட்டில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அரசாங்கம் பல்வேறு நபர்களைக் கைது செய்து வருவதை சுட்டிக்காட்டினார்.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்ட முறையில் இலக்கு வைக்கப்பட்டு அவர்கள் மீது இனவாதம், திருட்டு, போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு முத்திரை குத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான முத்திரைக்குத்துதல்கள் அரசியல்வாதிகளின் நற்பெயரைக் கெடுப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருமுறை குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் அவர்களின் பெயர்களை யார் சுத்தப்படுத்துவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே மாதிரியான கதையாடலுக்குள் (Narrative) இழுக்கப்படுவதனால் அவர்களால் ஒரு எதிர்க்கட்சியாகச் சுதந்திரமாகவும் வினைத்திறனுடனும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |