கட்டுக்கோப்பாக வாழ்ந்த சமூகம் மாறிவிட்டது: குற்றம் சுமத்தும் வட மாகாண ஆளுநர்!
கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று மாறியுள்ளதாகவும் சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைவடைந்து செல்வதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் , அக்கறையுடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (05.11.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாறிவிட்ட சமூகம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “எமது சமூகம் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

புறக் காரணிகளால் அது மாற்றியமைக்கப் பட்டுள்ளதா அல்லது எமது சமூகமே அவ்வாறு மாறிவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.எப்படி இருந்த நாம் இப்போது எப்படி இருக்கின்றோம்.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலை பீடாதிபதி சி.ரகுராம் மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சு.பரமானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





