வீதி அமைக்க கோரியவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் முரண்பாடு

Mannar Sri Lanka Sri Lankan Peoples
By Independent Writer Jan 31, 2026 10:12 AM GMT
Report
Courtesy: ஜோசப் நயன்

மன்னார் பாத்திமாபுரம் பகுதியில் வீதி ஒன்று அமைக்கும் போது நபர் ஒருவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்த நிலையில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், ”மன்னார் நகரசபைக்கு சொந்தமான எமில்நகர் எல்லையில் உள்ள பாத்திமாபுரத்தில் நகரசபைக்கு சொந்தமான வீதிகளில் நேற்று (30) கிரவல் பரவும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் பகுதி வீதியையும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

சம்மந்தப்பட்ட நபர் தொடர்ச்சியாக வீதியை அமைத்து தரக்கோரி பல முறை நகரசபை தலைவரிடம் முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவை சேனாதிராஜாவிற்கு யாழில் திருவுருவச் சிலை

மாவை சேனாதிராஜாவிற்கு யாழில் திருவுருவச் சிலை

வைத்தியசாலையில் அனுமதி

இந்த நிலையில் வீதியை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த மன்னார் நகரசபை தலைவரிடம் நேரடியாக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் எங்கள் பகுதி வீதியை அமைக்காது தனிபட்ட நபர் ஒருவருக்காக இந்த வீதியை அமைக்க முன்னிற்பது சரியா என கேள்வி எழுப்பி இருந்தார்.

வீதி அமைக்க கோரியவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் முரண்பாடு | Conflict With Mannar Municipal Council Chairman

இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் குறித்த நபரை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு நகரசபை தலைவர் தெரிவிக்க குறித்த நபர் வெளியேற மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நகரசபை தலைவர் குறித்த நபரை தள்ளி விட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

அநுர அரசின் புதிய பாதுகாப்புச் சட்டத்தால் அதிரும் இலங்கை...!

அநுர அரசின் புதிய பாதுகாப்புச் சட்டத்தால் அதிரும் இலங்கை...!

காவல் நிலையத்தில் முறைப்பாடு

அதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில் பரஸ்பரம் கற்களாலும் எறிந்த நிலையில் அதிகளவு தாக்குதலுக்கு உள்ளான எமில்நகரை சேர்ந்த நபர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதி அமைக்க கோரியவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் முரண்பாடு | Conflict With Mannar Municipal Council Chairman

குறித்த சண்டையின் போது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது அங்கே இருந்த நகரசபை பெண் உறுப்பினர் மீது கற்கள் எறியப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பெண் உறுப்பினரும் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின முக்கிய கட்சி உட்பட 08 கட்சிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

இலங்கையின முக்கிய கட்சி உட்பட 08 கட்சிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்