கொழும்பில் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை தாக்க முயன்ற தரப்பினரால் பரபரப்பு
புதிய இணைப்பு
கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதன்போது ஊடகவியலாளர் தரிந்து மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜிவ்காந்த் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது எதிர்பாளர்களால் கடுமையான வார்த்தை பிரயோகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை களத்தில் மேலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று கொழும்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்நினைவேந்தல் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக நிகழவுள்ள இந்த நினைவேந்தலில் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.
எனினும் சில இனவாத போக்குடையோர் மற்றும் சிங்கள ராவய அமைப்பினரும், குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதன்போது குறித்த தரப்பினர் பாதுகாப்பு தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு இனவாத கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்...
இதில் தலைவர் வேலுப்பில்லை பிரபாகரனின் புகைப்படத்தை எரித்தும், தகாத வார்த்தைகளை பிரயோகித்தும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கே நினைவேந்தல் இடம்பெருகிறது, அதை எதிர்க்க வேண்டும் என்றும் கடும் இனவாத செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |