ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு: வஜிரவிற்கு எதிராக உறுப்பினர்கள் கடும் கண்டனம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe)அரசியல் அலுவலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena)திறந்து வைத்த விடயமானது பேசு பொருளாகியுள்ளது.
வஜிர அபேவர்தன கடந்த 6ஆம் திகதி அலுவலகத்தை திறந்துவைத்தமைக்கு ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அலுவலக திறப்பு விழாவுக்காக ரவி கருணாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அவர் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வஜிர மீது குற்றச்சாட்டு
காலி(Galle) மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இவ்வாறு அலுவலகத்தை திறந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அதிகாரிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், சாகல ரத்நாயக்க அடுத்த தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக ஆசனங்கள் உள்ள கொழும்பு மாவட்டத்தில் வேட்புமனுவை பெற்று எப்படியாவது ஆசனம் பெற திட்டமிட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் எதிர்ப்பு மோதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |