நீர்கொழும்பு சிறை விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சி! ஆளுங்கட்சி பரபரப்பு குற்ற்சாட்டு
நீர்கொழும்பு சிறையில் உருவான மோதல் சூழ்நிலைக்கும், சில எதிர்க்கட்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற கருத்துக்களை உருவாக்கி, நடைபெற்று வரும் விசாரணைகளையும் நிகழ்வுகளையும் திசை திருப்ப முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசின் திட்டங்களை தடுக்க முயற்சி
இதேவேளை, சிறையில் உள்ளவர்களும் அரசின் திட்டங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சிறையிலிருந்து உருவாகும் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலைகளுக்கும், வெளியே எதிர்க்கட்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக நடத்தும் பிரச்சாரத்திற்கும் இடையே தெளிவான தொடர்பு இருப்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது என்று சூரியராச்சி மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |