அதிக வேலைப்பளு காவல் நிலையத்தை விட்டு உடமைகளுடன் வெளியேறிய காவலர்
Sri Lanka Police
Kalutara
Western Province
By Jaso
ஓய்வு இல்லாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாலும், கடுமையான மன உளைச்சலாலும் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய காவலர் குறித்து அளுத்கம பகுதியில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய காவலர் மாத்தறையின் கெக்கனதுரா பகுதியைச் சேர்ந்தவர், மேலும் அவர் அளுத்கம காவல்துறையின் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
ஓய்வு இல்லாத பணியால் கடும் மன அழுத்தம்
இன்று (07) மதியம் அளுத்கம காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த அவர், ஓய்வு இல்லாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இதன் விளைவாக, அவர் தனது கடமைகளைச் செய்ய முடியவில்லை என்று கூறி, காவல் நிலையத்தின் தகவல் குறிப்பேட்டில் இது குறித்து ஒரு குறிப்பை எழுதி வைத்துவிட்டு, தனது தனிப்பட்ட உடைமைகளுடன் காவல் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி