தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள்
உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை இன்று 104 அமெரிக்க டொலருக்கு அதிக விலையில் உயர்ந்துள்ளது.
இது கடந்த சில நாட்களில் காணப்பட்ட கடுமையான ஏற்றத்தின் தொடர்ச்சியாகும். கடந்த வார இறுதியில் 103 டொலருக்குக் கீழே இருந்த விலை, தற்போது 104 டொலரைத் தாண்டியுள்ளது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய விலைகளுக்கான மிக முக்கியமான அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய், 3 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 106 டொலரை எட்டியது. பின்னர் இன்று(16.03.2026) அதிகாலை ஓரளவு குறைந்துள்ளது.
பிரெண்ட் எண்ணெய் விலை
சர்வதேச சந்தைத் தரவுகளின்படி, இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை 102 முதல் 106.50 டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

கடந்த வார விலையான 103 டொலரிலிருந்து சுமார் 1% உயர்வுடன் 104 லரை எட்டியுள்ளது.
இது 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக உயர்ந்த அளவில் ஒரு நாள் வர்த்தகத்தில் பதிவாகியுள்ள விலை உயர்வாகும்.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளை சந்தை அஞ்சுகிறது.
இதனால், சில வங்கிகள் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை 150 டொலர் வரை செல்லலாம் என மதிப்பீடு செய்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை
இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இந்த உயர்வு பெரும் சவாலாக அமையும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதனால் போக்குவரத்து கட்டணங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான சவுதி அரேபியா, ரஷ்யா போன்றவை உற்பத்தியை அதிகரிக்கும் முடிவு எடுக்குமா என்பதும் சந்தையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில், விலை உயர்வு தொடரும் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் மத்திய கிழக்கு நிலவரம் மற்றும் OPEC+ நாடுகளின் முடிவுகளைப் பொறுத்து விலை ஏற்ற இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |