இலங்கையில் சதிவலை பின்னும் இந்தியா! சாவுமணியாக மாறும் என எச்சரிக்கை

india China Sri Lanka Control harmalingam Suresh
By Vanan Jan 30, 2022 12:11 PM GMT
Report

இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன், வடக்கு கிழக்கு தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி வலையை இந்தியா பின்னுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பானது, ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் (Tharmalingam Suresh) சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியிலுள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கோட்டாபய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். அது முற்று முழுதாக சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே நடைபெற்றுக் கொண்டிக்கின்றது.

இந்த நிலையிலே ஒரு சில மாதங்களில் அந்த அரசியல் யாப்பை முன்வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் சீனாவின் வருகையை அடுத்து கட்டுப்படுத்துவதற்காக இந்தியா எவ்வாறான விடையங்களை செய்யவேண்டும் என இந்த அரசோடு பேசி இலங்கையில் இருக்கின்ற தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் அடக்க கூடியவாறு பேசி செய்து தருவோம். ஆனால், நீங்கள் சீனாவின் உடைய வருகையை மட்டுப்படுத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டிலே இந்த அரசியல் அமைப்பு கொண்டுவரப்படுகின்றது.

குறிப்பாக 13 ஆவது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றது. அது 1987 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்த 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அது கொடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் தொடர்ந்து அடக்குமுறையான காணி அபகரிப்புக்கள், வாழ்வியல் என முழுக்க அழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு இருக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் தலைவர்கள் மீண்டும் அதனை புதுப்பிக்கும் விதமாக வந்து, அந்த அரசியல் அமைப்பிலே 13 ஆவது திருத்தத்தை புகுத்தி அதிலே மாகாணசபை முறைமைகளை இருப்பதாக காட்டிக்கொண்டு தாங்கள் சொல்லித்தான் அரசு அந்த வேலைத்திட்டத்தை செய்கின்றது என்ற நிலைப்பாட்டை காட்டுவதற்காக இந்த 6 கட்சிகளால் கடந்த 18-1-2022 இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.

இது தமிழ் மக்களை மீண்டும் ஒரு சதிவலையான அழிவுக்குள் கொண்டு போவதற்கான ஒரு சாவுமணியாகத் தான் இருக்கின்றது.

தமிழ் மக்களை பொறுத்தமட்டிலே 1948 ஆம் ஆண்டில் இருந்து இதுவரைக்கும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிவருகின்றார்கள். அன்றில் இருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் உட்பட்டுவருகின்றார்கள். அவர்களுடைய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இறையாண்மை கையகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா தன்னுடைய தேசிய பாதுகாப்புக்காக இங்கே இருக்கின்ற தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், வெறுமனவே தங்களின் நலனுக்காக மட்டும் எங்களுடைய மக்களின் அபிலாஷைகளை துக்கி எறிந்துவிட்டு வெறுமனவே உப்புச் சப்பு இல்லாத 13 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்குரிய தங்களுடைய கைக்கூலிகளாக இருக்கின்ற முகவர்களை இங்கே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த 13 ஆவது திருத்தத்தில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. அது கடந்த 34 வருடங்களுக்கு மேலாக நிராகரிக்கப்பட்ட ஒன்று. அந்த அடிப்படையில் இப்போது சரியான தலைவர்களை இனங்கண்டுள்ளனர்.

6 தலைவர்களால் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பாக நேற்றுமுன்தினம் நியாயம் கற்பிக்க 6 தலைவர்களும் இணைந்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தியுள்ளனர். எனவே இவர்கள் தான் இந்தியாவினுடைய கைக்கூலிகளும் அவர்களுடைய எடுபிடிகளுமாக இருக்கின்றனர்.

இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்கக்கூடாது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நன்கு தெரியும். எனவே அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்தியாவின் செயற்பாடு இருக்கவேண்டும்” என்றார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024