நாய் வளர்ப்பால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வெடித்தது சர்ச்சை
தெரு ஓரங்களில் திரியும் கட்டாக் காலி நாய்களை பிடித்து வந்து தனது வீட்டில் கரிசனையுடன் வளர்த்து வரும் பெண்மணி ஒருவர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆக்ரோஷமாக குரல் கொடுத்த சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது
வலிகாமம் மேற்குபிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது
தெருநாய்களை வளர்க்கும் செயற்பாடு
வீதிகளில் கவனிப்பார் இல்லாமல் திரியும் தெரு நாய்களை பிடித்து வந்து தனது வீட்டில் லட்சக்கணக்கான ரூபா செலவில் அவற்றை இவர் வளர்த்து வருகிறார்

தற்போது அவரது வீடுஒரு பெரிய நாய் பண்ணையாக மாறியிருக்கிறது இதனால் அவரது அயலவர்கள் பெரும் தொல்லைகளை அனுபவித்துவருகின்றனர்
இந்த நிலையில் அவர் நாய்களுக்காக அமைத்த கட்டிடம் அனுமதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
நாய்வளர்ப்பை யாரும் தடுக்க முடியாது
கடந்த 30 ஆம் திகதி வலிமேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த இந்த பெண் தனது நாய்வளர்ப்பை யாரும் தடுக்க முடியாது என்றும் அது தனது சொந்த விருப்பத்தை அடிப்படையாக கொண்டதாகவும் அது தனது மனம் சார்ந்த விடயம் என்றும் தெரிவித்தார்

இவரது கருத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரது கவனத்தையும் அது ஈர்த்தது கடும் விமர்சனங்களையும் கிளப்பியது எனினும் அந்த பெண் தனது நிலைப்பாப்டில் உறுதியாக இருந்தார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்