கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனை
hospital
corona
patient
By Jaso
ஹோமாகம அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு இன்று (ஏப்ரல் 25) கொவிட் -19 நோயாளிகளால் நிரம்பி வழிவதாக மருத்துவமனைபணிப்பாளர் டாக்டர் ஜனித் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
15 வயதிற்கு உட்பட்ட 5 சிறுவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏழு கொவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, முன்கூட்டிய குழந்தை பிரிவு மற்றும் இரண்டு கூடுதல் விடுதிகள் கொவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது, 5 விடுதிகளில் சுமார் 120 கொவிட் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்