யாழ்ப்பாணத்தில் பால் புரைக்கேறி உயிரிழந்த 15 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!
corona
sri lanka
jaffna
death
people
By Shalini
மந்திகை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டியைச் சேர்ந்த 15 மாதங்கள் நிரம்பிய குழந்தைக்கு பால் புரைக்கேறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதில் புரைக்கேறி உயிரிழந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி