மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு

Sri Lankan Tamils Batticaloa
By Vanan Nov 13, 2023 11:38 PM GMT
Report

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை வெளியேற்றக் கோரி அந்தப் பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60 ஆவது நாளாகவும் போராட்டத்தை தொடரும் நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பிற்கான விசாரணை

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் எங்கே..! (காணொளி)

மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு | Court Orders Eviction Of Mayilathamadu Invaders

இறுதியாக கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற இந்த வழக்கு, தீர்ப்பிற்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

மகாவலி அதிகார சபை சார்பாக அரச தரப்பு சட்டத்தரணி டில்கானி டி சில்வா மன்றில் முன்னியாகியிருந்தார்.

இதன்போது அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களால் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் காணி அனுமதி தொடர்பான எந்த வகையான ஆவணமும் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிவான் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய பிரதிவாதிகளான 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் அன்வர் சதாத் கட்டளையாக்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

ரணிலின் உத்தரவு

ஏற்கனவே மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டமை தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த மாதம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு | Court Orders Eviction Of Mayilathamadu Invaders

இதன்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக ரணில் விக்ரமசிங்க கூறியிருந்த நிலையில், இன்று அத்துமீறி குடியேறியுள்ளவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர்

முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர்

தீர்ப்பின் நடைமுறைச் சாத்தியம்

இதேவேளை, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையை உரிய தரப்பினர்கள் நடைமுறைப்படுத்துவார்களா என பொத்துவில் - பொலிக்கண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கேள்வி எழுப்பினார்.

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு | Court Orders Eviction Of Mayilathamadu Invaders

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள வேலன் சுவாமிகள், ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேறுமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அந்தத் தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இழுத்தடிப்பு செய்வதற்காக மகாவலி அதிகார சபையும் வனவளத் திணைக்களமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள் எனவும் வேலன் சுவாமிகள் கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024