இங்கிலாந்தில் கொரோனா - 24 மணிநேரத்தில் 183 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 183 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 51,899 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,99,058 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 183 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 64 லட்சத்து 62 ஆயிரத்து 113 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 18,76,724 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
