கிளிநொச்சியில் இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடு: திருடர்கள் செய்த காரியம்
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
கிளிநொச்சியில் பசு மாட்டை கடத்திச் சென்று இறைச்சி தவிர்ந்த கழிவுகளை கிணறு மற்றும் பொது இடங்களில் விசியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பரந்தன், முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாட்டை கடத்திச் சென்று, பரந்தன் முல்லைவீதி அருகில் மாட்டை இறைச்சிக்காக வெட்டி, கழிவுகளை(இறைச்சி தவிர்ந்த பாகங்கள்) கிணறு மற்றும் பொது இடங்களில் வீசி சென்றுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உயிர் காக்கும் மருத்துவமனையே படுகொலைக்களமான நினைவுகள்… 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்