தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள்: நீதி அமைச்சருக்கு பறந்த கடிதம்

Sri Lankan Tamils Ministry of justice Sri lanka Harshana Nanayakkara chemmani mass graves jaffna
By Thulsi Aug 08, 2025 03:21 AM GMT
Report

மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்துமாறு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் (Harshana Nanayakkara) மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த விடயம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கிசோதி சரவணமுத்துவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் நாம் பல தசாப்தகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

யாழில். இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை

யாழில். இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை

உண்மை மற்றும் நீதி

அந்தவகையில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் கடந்தகால வன்முறைகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.

தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள்: நீதி அமைச்சருக்கு பறந்த கடிதம் | Cpa Letter To Justice Minister Of Sri Lanka

மனிதப்புதைகுழி விவகாரத்தில் தடயவியல் ஆய்வு உள்ளடங்கலாக அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் அதேவேளை, இவ்விடயத்தில் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் உரியவாறான நிபுணத்துவம் மற்றும் வளங்கள் என்பன உடனடியாகத் தேவைப்படுகின்றன.

அதற்கமைய மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் கோருகின்றோம்.

வட, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி இயங்கி வருபவர்கள் உள்ளடங்கலாக இதனுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடமும் நடாத்திய நேர்காணல்களில் சில முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட செம்மணி அகழ்வு பணிகள் - காலில் செருப்புடன் எலும்புக்கூடு

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட செம்மணி அகழ்வு பணிகள் - காலில் செருப்புடன் எலும்புக்கூடு

சுயாதீனமான முறையில் மரபணு பரிசோதனை

தடயவியல் நிபுணத்துவத்தை வலுப்படுத்தல், சுயாதீனமான முறையில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு அவசியமான வளப்பகிர்வு மற்றும் மறுசீரமைப்புக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சுயாதீன விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடரலுக்கு அவசியமான நகர்வுகளை மேற்கொள்ளல்.

தோண்ட தோண்ட வெளிவரும் சடலங்கள்: நீதி அமைச்சருக்கு பறந்த கடிதம் | Cpa Letter To Justice Minister Of Sri Lanka

மற்றும் மனிதப்புதைகுழி அகழ்வின் போது உரியவாறான நியமங்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்தல், மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணை செயன்முறைகளில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்பை உள்வாங்கல், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உளவியல்சார் உதவிகளை வழங்கல், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய செயன்முறையைக் கையாளல், இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடரல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான வளங்களை ஒதுக்கீடு செய்தல் என்பனவே அவையாகும்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள், மனிதப்புதைகுழி அகழ்வுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விவகாரங்கள் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய கட்டமைப்புக்களால் குறிப்பிடத்தக்களவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகளில் எவ்வித அரசியல் தலையீடும் மேற்கொள்ளப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கும், அவை சுயாதீனமாக இயங்குவதற்கு அவசியமான வளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்த கிங்டம் திரைப்படம் - வெளியான அறிவிப்பு

ஈழத் தமிழர்களை மோசமாக சித்தரித்த கிங்டம் திரைப்படம் - வெளியான அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு, Cergy, France

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி